pongal parisu 2013
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பொங்கல் பரிசு 1 கிலோ அரிசியும், 1 கிலோ சர்க்கரையும், ரூ.100-இம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ்குமார் முன்னிலையில் அமைச்சர் செல்லப்பாண்டியன் தூத்துக்குடியில் போல் பேட்டை நியாயவிலை கடையில் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசியதாவது:
தூத்துக்குடியில் சமீப காலமாக ரேஷன் கடையில் வேலை பார்க்கும் சகோதரர்கள் எரிச்சல்பட்டு, கோபித்து பேசுகிறார்கள் என்று பொதுமக்களிடம் இருந்து புகார் வருகிறது. தயவு செய்து உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள்.
"நமக்கு எல்லாம் அம்மா கொடுக்கறாங்க சும்மா", அதை அனுசரணையுடன் வழங்கத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கூட்டம் அதிகமானாலும் பொறுப்போடு இருங்கள். அந்த கியூ-வில் உங்கள் பெற்றோர் மாதிரியானவர்கள் தான் நிற்கின்றார்கள் என்று அமைச்சர் செல்லப்பாண்டியன் பேசவும் அங்கிருந்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு கை தட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக