வெள்ளி, 1 மார்ச், 2013

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்து வைத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சிகூட்டம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்து வைத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சிகூட்டம்

rojaarunanblogspot,com


  1. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்து வைத்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் சசிகலா புஷ்பா தலைமையில் நடைபெற்றது. ஆணையர் மதுமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேயர் சசிகலா புஷ்பா பேசும்போது, தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனை கடந்த 22 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. நமக்கு கிடைக்க வேண்டிய 419 டிஎம்சி தண்ணீரை பெற்றுதர முதல்வர் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள. திமுக மத்திய அரசை தொடர்ந்து மிரட்டி வந்ததால் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனை தீ்ர்வு காண டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை அம்மா அவர்கள் பெற்றுத் தந்தார்கள். மத்திய அரசு அரசிதழில் வெளியிட செய்து வைத்து தமிழகத்திற்கு உரிமையை பெற்று தந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இத்தீர்மானம் ஏகமனதாக மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மண்டல குழு தலைவர்கள் வெள்ளைபாண்டி, கோகிலா, மாமன்ற உறுப்பினர்கள் அகஸ்டின், சாந்தி, வெஜிலா, சரவணன், செல்வம், பெரியசாமி, உட்படமாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



rojaarunanblogspot,comrojaarunanblogspot,com

rojaarunanblogspot,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக